கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது – ஆய்வில் தகவல்!
இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் செயல்திறன் கொண்டது என மூன்றாவது கட்ட பரிசோதனையின் முடிவில் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல அதிவேகமாக பரவுகிறது. தொற்றை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிக்கு அரசின் அனுமதி பெற்று உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
தமிழக பள்ளி மாணவர்களின் வீடுதேடி வரும் சத்துணவு – உயர் நீதிமன்றம் ஆலோசனை!
தடுப்பூசிகள் 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. முதல் டோஸ் செலுத்திய பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு 2வது டோஸ் செலுத்தப்படுகிறது. கோவிஷீல்டை விட கோவாக்சின் தடுப்பூசி அதிக ஆன்டிபாடிகளை உடலில் உருவாக்குகிறது என ஆய்வில் தெரிய வந்தது. இதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தியவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
TN Job “FB Group” Join Now
பிறகு பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை ஆய்விற்கு உட்படுத்தியது. தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவில் கோவாக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் செயல்திறன் கொண்டது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2% செயல்படுகிறது. பாதிப்புக்கு எதிராக 93.4 சதவீதம் செயல்திறனுடன் செயல்படுகிறது எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.