கோவையில் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி – மாணவர்கள் அச்சம்!!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியருக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திறக்கப்பட்டன. அதன்பின் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தினமும் உடல் வெப்பநிலை சோதனை செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு சோதனை செய்யும் போது அந்த பள்ளியில் பணிபுரியும் 38 வயது மதிக்கத்தக்க உயர்கல்வி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 92% மாணவர்கள் கற்றல் திறனை இழந்துள்ளனர் – ஆய்வின் முடிவில் தகவல்!!
அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அந்த பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்