குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – இன்று முதல் 4 நாட்களுக்கு!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் தடை:
தமிழகத்தில் கொரோனா முதல், இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் மக்கள் பெரிதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு விகிதம் படிப்படியாக குறைந்த நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டாம் அலை பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் நோய் பரவும் விகிதம் அதிகரிக்க தொடங்கியது.
ஒலிம்பிக் வீராங்கனை பவானிதேவிக்கு தங்க செயின் பரிசு – நடிகர் சசிகுமார் நேரில் வாழ்த்து!
தமிழகத்தில் ஈரோடு மற்றும் கோவை பகுதிகளில் நோய் பரவும் விகிதம் அதிகமாக இருந்தது காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து சுற்றுலா தலங்கள் மற்றும் திருவிழாக்கள் என பொதுமக்கள் கூடும் பகுதிகள் / நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நோய்த்தாக்கம் குறைவாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் கோவை குற்றாலம் அருவிக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் அருவிகளில் குளித்து வருகின்றனர்.
சபரிமலை புரட்டாசி மாத பூஜை ஆன்லைன் முன்பதிவு தொடக்கம் – பக்தர்கள் கவனத்திற்கு!
தற்போது கேரள மாநில மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக பொதுமக்கள் குளிக்க முடியாத சூழல் நிலவியுள்ளது. அதனை தொடர்ந்து கோவை குற்றாலம் சுற்றுலா தளத்தில் இன்று முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை 4 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.