மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழக்கு – ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு!
மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இட ஒதுக்கீடு:
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியானதும் நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPFO) இ-நாமினேசன் தாக்கல் – ஆன்லைன் வழிமுறைகள்!
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு கோர உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. மேலும் மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என எந்த விதிகளும் இல்லை என்றும் தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
இவ்வாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு பின்பற்றாமல் இருந்தது. இதையடுத்து திமுக தரப்பில் இருந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு ஆகஸ்ட் 25ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவுக்கு பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.