கருக்கலைப்பு என்பது பெண்களின் உரிமை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

0
கருக்கலைப்பு என்பது பெண்களின் உரிமை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கருக்கலைப்பு என்பது பெண்களின் உரிமை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கருக்கலைப்பு என்பது பெண்களின் உரிமை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கேரள மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

கருக்கலைப்பு:

கேரள மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரது வயிற்றில் வளரும் 22 வார சிசுவை கலைக்க அனுமதி வேண்டி ஒரு தம்பதியினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் கர்ப்பிணிப் பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பார்வை திறன் கோளாறு இருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் அவர் இடது கால் செயலிழந்து அவதிப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள் – ‘நமது நண்பன்’ என்று சொல்லப்படும் நிழலும் இன்றைக்கு தெரியாது!

அதனை தொடர்ந்து அவர் வயிற்றில் வளரும் 22 வார சிசுவுக்கு ‘கிளைன்ஃபெல்டா்’ என்னும் மரபணு கோளாறு உள்ளதாகவும் மருத்துவ ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்த குறைபாடு உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானது இல்லை என்றாலும் குழந்தையின்மை தேவையை தாயால் புரிந்து கொள்ள முடியாது என்று கூறப்பட்டது. குறிப்பிட்ட வாரங்கள் வரை வளர்ந்துள்ள கருவை அளிப்பதற்கு தாய்க்கு சட்டப்படி உரிமை உள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் ‘வயிற்றில் வளரும் கருவை கலைப்பதும், கலைக்காமல் இருப்பதும் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை. அந்த உரிமையை பறிக்க முடியாது’ என்று நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது. அதனை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவை கலைப்பது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் கருவை கலைக்க அனுமதி வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!