தமிழகத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு – 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு!!

0
தமிழகத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு - 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு - 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு – 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆவடி வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மின் கட்டணம்:

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த கடந்த ஆண்டு மின்வாரிய ஒழுங்குமுறை அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணம் சுமார் 12 முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இந்த மின் கட்டணம் உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டும் மின்வாரியத்தின் கடன் சுமையை குறைக்கும் வகையிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வால் சாமானியர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நாளை மற்றும் நாளை மறுநாள் சதுரகிரிக்கு செல்ல தடை – வனத்துறை அறிவிப்பு!!

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு 10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆவடி வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தை அளவீடு செய்து அதில் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!