தமிழக கோவில்களில் அறங்காவலர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அறங்காவலர் தேர்வில் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழுள்ள திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான அமைப்பாக அறங்காவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தனியாக அமைக்கப்படும். இந்நிலையில் திருக்கோயில்களை நிர்வாகம் செய்ய பரம்பரை அறங்காவலர்களும், பரம்பரை இல்லாமல் இருக்கும் அறக்காவலர்களும் இருப்பார்கள்.
இராணுவ பணிக்கான ஆட்கள் சேர்ப்பு – இந்த 2 மொழிகளில் மட்டுமே தேர்வு.. அதிர்ச்சியில் விண்ணப்பதாரர்கள்!
அந்த வகையில் அறக்காவலர்களாக பணியாற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர், உதவி ஆணையர் அல்லது கோயில் ஆய்வாளர் அலுவலகங்களில் உரிய விண்ணப்பத்தைப் பெற்று அதனை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் இது குறித்து பல வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வழக்கு விசாரணையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அறங்காவலர் தேர்வில் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளைக்குள் பதிவேற்றம் செய்ய அறநிலைத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download