ரயிலில் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்தால் இனி இதான் தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் மக்கள் பலர் வெகுதூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தான் அதிகம் நாடுகின்றனர். அந்த வகையில் ரயில்களில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணிகளுக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் பயணம்:
ஏழை எளிய மக்கள் முதல் வசதியானவர்கள் வரை பலர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதற்கு காரணம் ரயில் பயணம் சொகுசாகவும், குறைந்த கட்டணத்தில் விரைவாக சென்றடைவதாகவும் இருக்கிறது. ரயில்களில் அப்போதே பயணசீட்டு வாங்கி பயணம் செய்யலாம் அல்லது முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் அல்லது தக்கல் முறையில் பயணத்திற்கு முந்தைய நாள் டிக்கெட் புக் செய்து பயணம் செய்யும் வசதி இருக்கிறது.
மேலும் சாமானிய மக்களுக்கு அமர்ந்து செல்லும் பயண சீட்டும், படுத்துக் கொண்டே செல்ல பயண சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் பொது பெட்டியில் இளைஞர்கள் 5 பேர் மங்களூருவில் இருந்து மட்கானுக்கு பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்ததால் ரயில்வே போலீசார் அவர்களை கைது செய்தனர். இது குறித்து டிடிஇஆர் விசாரணை நடத்தினார். அப்போது அந்த 5 இளைஞர்களும் சரியாக பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாகவும், மேலும் சக பயணிகளுக்கு இடையேறு ஏற்படுத்தியதாகவும், அந்த ரயிலின் டிடிஇஆர் உடுப்பி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
உண்மையான தீபாவளி அரசு ஊழியர்களுக்கு தான்.. அடுத்தடுத்து வெளியாகும் குட் நியூஸ் – பம்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அவருடைய புகாரை அடுத்து ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள், சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து இளைஞர்களை பிடித்து வழக்கு பதிவு செய்தனர். அந்த 5 இளைஞர்களும் உடுப்பி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ரயிலில் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்த 5 பேருக்கும் ஒரு மாதம் சிறைத்தண்டனையும், தலா ரூ. 1000 அபராதமும், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் தலா ரூ. 100 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்