நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு – ஜூன் 30 வரை கருத்துகேட்பு!
தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தின் கீழ் நீதித் துறையில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பை அமல்படுத்தும் நோக்கில் நீதிமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஔிபரப்புதல் தொடர்பாக வரைவு மாதிரி விதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 30 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை மாற்றம்:
இந்திய நீதித் துறையில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பை அமல்படுத்த தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு, இந்திய அரசின் நீதித் துறையுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு காரணம் நீதித்துறை மீதான வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கம், நீதிக்கான அணுகல் ஆகியவற்றில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்திற்கு மின்னணு குழு முன்னுரிமை அளித்துள்ளது.
குண்டான ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள் – ஜப்பானியர்களின் வியாபார யோசனை!!
இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவது மற்றும் பதிவு செய்வது தொடர்பான வரைவு மாதிரி விதிகளை உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வெளியிட்டுள்ளது. https://ecommitteesci.gov.in/document/draft-model-rules-for-live-streaming-and-recording-of-court-proceedings/ என்ற இணையதளத்தில் இந்த வரைவு மாதிரி விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அந்த வரைவு மாதிரி குறித்த கருத்துக்களை ஜூன் 30 ஆம் தேதி அன்று அனுப்ப வேண்டும். அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மாதிரிகள் குறித்த கருத்துக்களை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை, உச்சநீதிமன்ற நீதிபதி டாக்டர் தனஞ்சயா ஒய் சந்திரசூட் கடிதம் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.