ஜோடியாக போட்டோஷூட் நடத்திய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்ந்து ஜோடியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போட்டோஷூட்:
சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்கள் சமீப காலமாக அடிக்கடி விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் முகம் ரசிகர்களுக்கு அதிக பரிட்சயமாகிறது. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி தம்பியாக வரும் கண்ணனுக்கு, தற்போது சீரியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் தனியாக மூர்த்தி வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வருவதால், அடிக்கடி முக்கிய காட்சிகள் இவர்களை மையப்படுத்தி வருகிறது. தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்திரி நடித்து வருகிறார்.
‘பிக்பாஸ்’ வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த ப்ரியங்கா, நிரூப்புடன் மோதல் – வெளியான ப்ரோமோ!
ஆனால் முன்னதாக விஜே தீபிகா ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு மேக்கப் காரணமாக ஏற்பட்ட அலர்ஜி அதிகமாகி வந்த காரணத்தால் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தொடரில் நடிக்கும் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. இவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைந்து எடுத்த பல ரீல்ஸ்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றது. சமீபத்தில் இவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு சென்று எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டனர்.
இந்த வாரம் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இதேபோல் பல இடங்களுக்கும் ஒன்றாக சேர்ந்து செல்வது போல் பதிவுகள் பதிவிடப்பட்டு வருகிறது. சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். அதிகமாக ஒரே கலரில் தான் இருவரின் ஆடையும் இருக்கும். இதனால் ரசிகர்கள் இவர்கள் காதலிப்பதாக சந்தேகித்து வந்தனர். தற்போது ரசிகர்களின் சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில், சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்ந்து ஜோடியாக கப்புள்ஸ் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தீபிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவர்கள் காதலிப்பது உறுதியாகியுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.