தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஒத்திவைக்கபட்ட கலந்தாய்வு! மீண்டும் நடத்த கோரிக்கை!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கபட்ட கலந்தாய்வு! மீண்டும் நடத்த கோரிக்கை!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கபட்ட கலந்தாய்வு! மீண்டும் நடத்த கோரிக்கை!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஒத்திவைக்கபட்ட கலந்தாய்வு! மீண்டும் நடத்த கோரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையருக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

ஆசிரியர் சங்கம் கோரிக்கை:

தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின்னர் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் முறையில் தான் நடைபெற்று வந்தது. இருப்பினும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் , பிப்.1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசுக்கு கோரிக்கை!

இந்த அறிவிப்பு அடிப்படையில் ஜனவரி 24 முதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இருப்பினும் ஜனவரி 26ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நடைபெறவிருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் , ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு LIC வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையால் ஒத்திவைக்கப்பட்டு இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு, ஒத்திவைக்கப்பட்ட பணி தொகுதிகளுக்கு புதிய அட்டவணை வெளியிட்டு, அவர்களுக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட வரிசைக்கிரமத்தில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!