தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை - 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை - 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை உதவி மையத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் 2022 – 2022ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறத் தொடங்கியது. மொத்தமுள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அதனை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தற்போது அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சென்னையில் உள்ள கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இனி பொறியியல் மாணவர்களுக்கும் 2 பட்டங்கள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!

அதனை தொடர்ந்து தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதனால் இப்பயிற்சி மையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் ஓரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கம்மியர் மோட்டார் வாகனம், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பவியலாளர், கம்மியர் மின்னணுவியல், இயந்திரம் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற விரும்புபவர்கள் 2 ஆண்டுகால பயிற்சியும் 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே போல பற்றவைப்பவர் பிரிவில் சேர 8ம் வகுப்பு வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 750 மற்றும் மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை போன்றவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!