தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பணிமாறுதல் கலந்தாய்வு! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படும் பணிமாறுதல் கலந்தாய்வு குறித்து முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
பணிமாறுதல் கலந்தாய்வு:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். அதாவது அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின் பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே ஒன்றியம் அல்லது மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என 3 பிரிவுகளாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் விருப்ப மாறுதல் விண்ணப்பித்து தங்களது ஊரிலே பணிபுரியும் வகையில் ட்ரான்ஸ்பர் பெற்றுக்கொள்வார்கள்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மத்திய அரசின் ‘மேரா ரேஷன்’ செயலி!
இந்த கலந்தாய்வானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெற்று விடும். ஆனால் கடந்த 2021 மே மாதம் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்ததால் இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை. இந்நிலையில் பழைய பொது கலந்தாய்வு முறை மூலம் பணிமாறுதல் செய்வதால் வட மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அதிகம் இருந்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் கலந்தாய்வு முறையை மாற்ற அரசு முடிவு செய்தது. அதன்படி பூஜ்ஜிய கலந்தாய்வு முறை தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் டிச.22 ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்த பூஜ்ஜிய கலந்தாய்வு முறையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வந்த நிலையில் முதல் முறையாக மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் பலர் இதனை ஆதரித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக நடத்தப்படும் என்று அரசு ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்படுகின்ற பணிமாறுதல் கலந்தாய்வு இதுவரை நடைபெறவில்லை. இந்நிலையில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.