நவம்பர் 8 முதல் இன்ஜினியரிங் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் – அண்ணா பல்கலை!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் (27.10.20210) (28.10.2021) ஆகிய தேதிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கடந்த ஜூலை மாதம் 26 ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. நடப்பு ஆண்டு கொரோனா பரவலால் 12 ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் இன்றி மதிப்பிட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் அனைவரும் ஆல் பாஸ் ஆன நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவியது. இந்த ஆண்டு கொரோனா பரவலால் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. மேலும் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. ஆகஸ்ட் 27ம் தேதியுடன் முடிவடைந்தது.
TNPSC குரூப் 4 VAO தகுதிகள், பாடத்திட்டம் & தேர்வு முறை – முழு விவரங்கள் இதோ!
செப்டம்பர் 15 முதல் தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி அக்டோபர் 5 ம் தேதி வரை கலந்தாய்வு வரை பொது பிரிவு மற்றும் சிறப்பு பிரிவினருக்கும் தனித்தனியாக நடைபெற்று முடிந்தது. கலந்தாய்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் தேவிப்பட்டினதத்திலுள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியிலும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
PF ரெகார்டில் தவறான பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அதன் மூலம் நடப்பு கல்வியாண்டில் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. மாணவர் சேர்க்கையின் பொது மாணவர்கள் கல்வி தகுதி சான்றிதழ்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். கல்லூரி வளாகத்தில் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 8 ம் தேதி பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.