TNPSC குரூப் 4 பணியிடத்திற்கான கவுன்சிலிங் – எவ்வளவு ரேங்க் இருந்தால் வேலை?
தமிழகத்தில் குரூப் 4 பணியிடத்திற்கான கவுன்சிலிங் கூடிய விரைவில் துவங்க இருக்கும் நிலையில் எவ்வளவு ரேங்க் இருந்தால் வேலை கிடைக்கும் என்பதற்கான முழு விளக்கங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 4 கவுன்சிலிங்:
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், 10,117 பணியிடங்களுக்கான குரூப் 4 கவுன்சிலிங் கூடிய விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இந்நிலையில், தற்போது எந்தெந்த பிரிவினர் எவ்வளவு ரேங்க் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
WhatsApp செயலியில் இந்த மாதத்திற்கான அப்டேட் – ‘Channels Lists’ வசதி அறிமுகம்!
அதாவது, இளநிலை உதவியாளர் பணிக்கு மொத்தமாக 5,167 காலிப்பணியிடம் இருக்கிறது. இதில் ஆண்கள் 1700 ரேங்க் வரைக்கும், பெண்கள் 1800 ரேங்க் வரைக்கும், தமிழ் வழியில் கல்வி பயின்ற ஆண் 1850 ரேங்க் வரைக்கும், தமிழ் மொழியில் கல்வி பயின்ற பெண்கள் 1900 ரேங்க் வரைக்கும் பெற்று இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஆண்கள் 2000 ரேங்க் மற்றும் பெண்கள் 2100 ரேங்க், தமிழ் வழியில் கல்விப் பயின்ற ஆண்கள் 2150 ரேங்க், தமிழ் வழியில் கல்வி பயின்ற பெண்கள் 2200 ரேங்க் வரை பெற்று இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு ஆண்கள் 900 ரேங்க், பெண்கள் 950 ரேங்க், தமிழ் வழியில் கல்வி பயின்ற ஆண்கள் 1000 ரேங்க், தமிழ் வழியில் கல்வி பயின்ற பெண்கள் 1050 ரேங்க் பெற்று இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் எவ்வளவு ரேங்க் பெற்று இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதற்கான முழு தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.