தமிழக ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் பெயர் திருத்தம்? அறிவிப்பு வெளியீடு!
திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதாவது மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் அறிவிக்கும் போது பெண்கள் அதிகம் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண் பெயர் திருத்தம்:
தமிழக மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கியுள்ளது. இந்த ரேஷன் கார்டுகள் குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளை கொண்டு மலிவான விலையில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் முன்னுரிமை பெற்ற 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் இடம்பெறுவது அவசியம். அதற்காக பெண் பெயர்களில் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் மூலமாக 21 லட்சத்து 83 ஆயிரத்து 449 பேர் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும் 2 லட்சத்து 50 ஆயிரத்து 769 முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகளும், 5 லட்சத்து 23 ஆயிரத்து 814 முன்னுரிமை இல்லாத கார்டுகளும் இருக்கிறது.
ஜூலை 18 முதல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் – GST வரி விகிதம் உயர்வு!
எனவே மத்திய அரசு உத்தரவின் பெயரில் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவராக இருக்க வேண்டும். தமிழகத்தின் பிஎச்எச் என்ற முன்னுரிமை பெற்ற கார்டுகள் மற்றும் அந்திநோயா அன்னை யோஜனா கார்டுகளில் பெண்கள் குடும்ப தலைவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பெயரில் மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு குடும்ப தலைவர் மாற்றப்பட வேண்டிய கார்டுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் இருக்கும் வகையில் திருத்தம் செய்யும் பணி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.