பொது கழிப்பறைகள் குறித்த மாநகராட்சியின் எச்சரிக்கை – மீறினால் கடும் நடவடிக்கை!
தமிழகம் முழுவதும் அரசு இலவச பொது கழிப்பறைகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் பொது கழிப்பறைகள் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொது கழிப்பறைகள்:
தமிழகம் முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசு முக்கிய இடங்கள், அதிக மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இது போன்ற வேறு சில பகுதிகளில் இலவச பொது கழிப்பறைகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கழிப்பறை தேவை உள்ள மக்கள் அவற்றை எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அரசு திட்டமிட்டது. மேலும், சுற்றுப்புறமும் அசுத்தங்கள் இல்லாமல் தூய்மையாக இருக்கும்.
ஆனால், இந்த இலவச பொது கழிப்பறைகளில் சிலர் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தது. இதனால் முன்னதாக அரசு இதை பற்றிய ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-70க்குட்பட்ட குளக்கரை இணைப்பு சாலை, மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு-125 காமராஜர் சாலை ஆகிய 3 பகுதிகளில் மீண்டும் பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார்கள் அரசுக்கு வந்துள்ளது.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் – அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு! வரவேற்கும் பெற்றோர்கள்!
Exams Daily Mobile App Download
இத்போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் கட்டணமில்லா பொதுக்கழிப்பிடம் என பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி, பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்