கொரோனாவை தடுக்க கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 9 விஷயங்கள்

0
கொரோனாவை தடுக்க கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 9 விஷயங்கள்
கொரோனாவை தடுக்க கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 9 விஷயங்கள்

கொரோனாவை தடுக்க கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 9 விஷயங்கள்

1.எங்கிருந்து வந்தது இந்த கொரோனா ?

உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புதிய உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்று சீனா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக , டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

2.கொரோனா வைரஸ் என்பது தான் என்ன?

கொரோனா வைரஸ்கள் நிறைய உள்ளன. இது நாவல் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. பறவைகள், வௌவால்களின் வழியாக ஏற்கனவே நிறைய தாக்கங்கள் இருந்திருக்கின்றன. இதற்கு முன்பாக மனிதர்களில் நாம் பார்த்திராத ஒன்று. இது பேட் (வௌவால்கள் மூலமகப் பரவுவதாக) வைரஸுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதோடு தொடர்புடைய ஒரு வைரஸ் வகை தான் சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் என்னும் பெயரில் பரவி பின் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா தாக்காம நீங்க ஸ்டிராங்கா இருக்க என்னென்ன உணவெல்லாம் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.

3.கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளாக காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஆகியவை இருக்கும். சிலருக்கு டயேரியா பாதிப்புகள் கூட இருக்கும். இவை சாதாரண உடல்நிலை சரியாத பிரச்சினை என்று விட்டு விடாதீர்கள். ஆரம்ப காலத்திலேயே மருத்தவ ஆலோசனை பெறுவது நல்லது.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

4.தொற்றின் தீவிர அறிகுறிகள் எப்படியிருக்கும்?

கொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று பார்க்கலாம். மூக்கு ஒழுகுதல்,தலைவலி,இருமல், மேல் சுவாசக் கோளாறு,தொண்டை கரகரப்பு,காய்ச்சல்,உடல் சோர்வாக இருப்பதுபோன்ற அறிகுறிகள் தான் ஆரம்பத்தில் இருக்கும். இவை வழக்கமாக இருப்பது தானே என அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் முதல் மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

5. மற்ற சாதாரண ப்ளூ காய்ச்சல் போன்றது தானா?

ஆம். கொரோனா வைரஸ் தொற்றும் மற்ற ப்ளூ காய்ச்சலைப் போன்று தான பரவத் தொடங்குகிறது. ஆனால் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்றவர்களை இது மிக வேகமாகத் தாக்கக்கூடும். இது குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என்ற வேறுபாடுகள் எல்லாம் பார்ப்பதில்லை. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்ற எவரையும் இது எளிதாகத் தொற்றிக் கொள்ளும். இதிலிருந்து மீள்வதற்கு சில நாட்கள் எடுக்கலாம்.

6.முறையான மருத்துவமனை சிகிச்சை தேவையா?

கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் இருந்தால் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது. மற்றவர்களுக்கு காற்றின் மூலம், தொடுதல் மூலம், இருமல் போன்றவற்றின் மூலம் இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற சந்தேகமோ அல்லது உறுதியாக தெரிந்தாலோ முதலில் முறையான மருத்துவமனை பரிசோதனையும் அதன்பின் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையும் பெறுவது நல்லது. அது நீங்கள் விரைவில் குணமடைவதுடன் மற்றவர்களுக்கும் பரவாமல தடுக்க முடியும்.

7.கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?

ஆரம்பத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களுக்கு அவர்களுடைய தொடர்புடைய வௌவால், மீன், பாம்பு போன்ற விலங்குகளிலிந்து பரவுவதாகக் கண்டறியப்பட்டது. அதன்பின் அது படிப்படியாக மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் தீவிர தொற்றாக மாறியிருக்கிறது. குறிப்பாக, இருமல், முத்தம், சலைவாய் ஆகியவற்றின் மூலமாகவும் பரவுவதாகச் சொல்லப்படுகிறது.

8.எத்தனை நாள் வரை தொற்று பாதிப்பு இருக்கும்?

இந்த கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பாகவே தடுக்கும் வழிமுறைகளைக் கையாளுவது அவசியம். ஏனென்றால் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கிட்டதட்ட குறைந்தபட்சம் 14 நாட்களாவது தொற்றுக்கள் இருக்கும். அதிலும் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கிறவர்களை உயிரைப் பறிக்கும் அளவுக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தும்.

9.கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கு தடுப்பூசி, மருந்துகள் உண்டா?

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்காக குறிப்பாக தடுப்பூசிகள் என்று எதுவும் கிடையாது. மற்ற சில நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் மூலம் உங்களுடைய எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் பணியில் மட்டும் மருத்துவர்கள் செயல்பட்டு வருகிறார்களே ஒழிய கொரோனாவிற்கென தனியே தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!