கொரோனா எதிரொலி அனைத்து மாவட்ட எல்லைகளும் மார்ச் 31 வரை மூட உத்தரவு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி நிலவரப்படி, இந்தியாவில் இதுவரை 17,493 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!
அதே போன்று, கொரோனா நோய்த் தொற்றால் இதுவரை ஏழு பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 89 பேர் covid-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அம்மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாகசெய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 க்கும் அதிகமாக உள்ளது. இப்பாதிப்பினை தமிழகத்தில் கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூட தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மக்கள் 31 வரை ஊரடங்கு முறையை கைப்பிடிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்துகிறது.
சினிமாவிலும் கொரோனா மரண மாஸ் – திரையரங்குகளும் மூடல்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்