இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேருக்கு கொரோனா தொற்று…6 பேர் பலி – ஷாக்கிங் ரிப்போர்ட்!!
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றின் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இதுவரை தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறந்தவர்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 842 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,64,810 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனாவால் நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதில் கேரளாவை சேர்ந்தவர்கள் 5 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,520 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 12,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.