நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? கொரோனா எதிரொலி! ஏப்ரல் 27 பிரதமர் ஆலோசனை!

0
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? கொரோனா எதிரொலி! ஏப்ரல் 27 பிரதமர் ஆலோசனை!
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? கொரோனா எதிரொலி! ஏப்ரல் 27 பிரதமர் ஆலோசனை!
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? கொரோனா எதிரொலி! ஏப்ரல் 27 பிரதமர் ஆலோசனை!

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தாக்கத்தில் இருந்து பல மாநிலங்களில் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்போது 2 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி வருகின்ற 27- ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஊரடங்கு:

பல உலக நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி இரண்டு ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். கொரோனாவின் மூன்று அலைகளில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்போது கொரோனாவின் நான்காம் அலை பரவல் சீனா மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் பரவ தொடங்கி இருக்கிறது. ஜூன் மாதத்தில் இந்தியாவிலும் இதன் தாக்கம் இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையின் போது நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிய கொரோனா தொற்று தடுப்பூசி பணிகள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. அதனால் தற்போது பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ தொடங்கி இருக்கின்றனர். ஆனால் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் மே மாத பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – முழு விவரம் இதோ!

அதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது, இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி வருகின்ற 27- ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறார். அதில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் விரைவில் விளக்கம் அளிப்பார் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!