தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு எழுந்த மாவட்டங்கள் !!!!

0
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு எழுந்த மாவட்டங்கள் !!!!
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு எழுந்த மாவட்டங்கள் !!!!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு எழுந்த மாவட்டங்கள் !!!!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் இந்தியா அளவில் தமிழகம் 7 வது இடத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் தான் “Red Zone” மாவட்டங்கள் அதிகம் உள்ளன.

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா:

நேற்று (29.04.2020) வரை தமிழகத்தில் 2,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 27 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் எனும் ஆறுதல் செய்து நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

கொரோனாவை விரட்ட மருந்து ரெடி !!!

கொரோனாவில் இருந்து மீண்டு எழுந்த மாவட்டங்கள்:

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் தான் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களான ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

  • ஈரோடு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த கால கட்டத்தில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த மாவட்டங்களில் ஈரோடு முதன்மையாக இருந்தது. ஆனால் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் ஒருவர் மட்டும் இறந்துவிட்டார். அதன்பின் இருந்த 69 பேரும் பூரண குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதன் பின்னர், 12 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. எனவே தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது.

  • நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்கள் அனைவரும் குணமான நிலையில் அம்மாவட்டத்தில் மே 4ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் வசக்கம்போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

  • கரூர்

கரூர் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 42 பேரில் 41 பேர் ஏற்கெனவே குணமடைந்துள்ள நிலையில் ஒருவர் சிகிச்சையில் உள்ளார். கொரோனா இல்லாத மாவட்டமாக கரூர் மாற வாய்ப்பு உள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • கிருஷ்ணகிரி

இன்றளவு வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி தொடர்ந்து பச்சை மண்டலாக உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!