நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
கொரோனாவின் தாயகமான சீனாவில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸான பிஏ.5 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் கொரோனா பரவல் அதிகரிப்பால் மூடப்பட்டுள்ளன.
கொரோனா பரவல்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு முதன்முதலில் சீனாவில் தான் பரவத் தொடங்கியது. அதன் பின் தொற்றின் தாக்கம் பல நாடுகளை புரட்டி போட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் மூன்று அலை தாக்கத்தில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாயகமான சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
கொரோனாவின் உருமாறிய வைரஸ் ஓமிக்ரான் பரவல் காரணமாக பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதன் படி சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உருமாறிய பிஏ.5 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 400யை நெருங்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள மக்காவ் பிராந்தியத்திலும் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தேர்வில்லாத புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !
அங்கு உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் ஏராளமாக இருக்கின்றது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன. அது மட்டுமில்லாமல் பெய்ஜிங் நகரிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் அமல் படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.