இந்தியாவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 12,781 பேர் பாதிப்பு!

0
இந்தியாவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவும் கொரோனா - ஒரே நாளில் 12,781 பேர் பாதிப்பு!
இந்தியாவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவும் கொரோனா - ஒரே நாளில் 12,781 பேர் பாதிப்பு!
இந்தியாவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 12,781 பேர் பாதிப்பு!

இந்தியாவில் ஒரு நாளில் மட்டுமே 12,781 பேர் கொரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டு 18 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. இதனால் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், கூடுதலாக சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட நான்கு கோடி மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இறப்பு வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போதைக்கு இந்தியாவில் மட்டுமே உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 781 பேர் கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும், கொரோனா தொற்றுக்கு ஆளாகி 18 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சுகாதாரத்துறை அமைப்பு அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கைகளை ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தி வருகிறது. மேலும், பொது இடங்களுக்கு செல்வதை பொது மக்கள் கூடிய வரைக்கும் தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பொது இடங்களில் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

மேலும், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவு கொரோனா பரவி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்குநாள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி கொண்டிருப்பதால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருவதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி என சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!