மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஊரடங்கு அச்சத்தில் பொது மக்கள்!
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நாடுகள் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டு சீனா நகரம் உஹான் மாநிலத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதன் விளைவாக பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்து மக்கள் மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கையை நோக்கி செல்லத் தொடங்கினர். இந்த நேரத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது.
Exams Daily Mobile App Download
அதிலும் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்நாட்டின் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உருமாறிய பிஏ.5 வகை தொற்று பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தினசரி பாதிப்பு 400க்கு மேல் பதிவாகி வருகிறது. அந்நகரங்களில் உலகின் மிகப்பெரிய சூதாட்ட கிளப்புகள் ஏராளமாக உள்ளன. அதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இது தொற்று பரவலுக்கு வழிவகுக்கிறது. இதனையடுத்து மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று முதல் அடைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கோவில் நடை திறப்பு!
அதே போல பெய்ஜிங் நகரிலும் கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் பொது முடக்கம் அமலாக்கப்படலாம் என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏற்கனவே மக்கள் தொற்று பாதிப்பால் சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மக்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும். அதனால் அந்நாட்டு சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அரசின் நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.