ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியில் அரசாங்கம்!
நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்புடைய தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்ற போதிலும் தினசரி பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அந்நாட்டு அரசாங்கத்தை சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா வைரஸ்
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் என்னும் உயிர்கொல்லி நோய் இன்று வரையும் உலக நாடுகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் விஞ்ஞான உலகத்திற்கு சவாலாக மாறியுள்ள இந்த கொரோனா வைரஸ், வளர்ந்த வல்லரசு நாடுகளை கூட ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இந்த நோய் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று இதுவரை ஒருவராலும் கணிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை நிலவரம் ஆகும். அந்த வகையில் தற்போது நியூசிலாந்து நாட்டில் அடுத்த கொரோனா அலையின் தாக்கம் தீவிரமடைய துவங்கியுள்ளது.
தமிழகத்தில் நவ.1 முதல் 1 – 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | முக்கிய உத்தரவு!
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அந்த நாட்டின் தென் தீவில் மட்டும் சுமார் 104 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்தில் பதிவு செய்யப்பட்ட தினசரி பாதிப்பு எண்ணிக்கையின் அதிகபட்சமாக கருதப்படுகிறது என அப்பகுதியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான ஊரடங்கிற்கு உட்பட்டிருக்கும் நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் பெரும்பாலான புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தவிர 5 மில்லியனுக்கும் அதிகமான அந்நாட்டின் மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இப்போது நியூசிலாந்து நாட்டில், தென் தீவின் வடகிழக்கில் உள்ள ப்ளென்ஹெய்ம் பகுதியில் பதிவாகியுள்ள புதிய வழக்குகள் மேலும் பரவுவதற்கான அபாயங்கள் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TCS, Wipro, Infosys ஊழியர்களின் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work from Home திட்டம்!
இதற்கிடையில் நேற்று (அக்.22), அந்நாட்டின் பிரதம மந்திரி ஜெசிந்தா ஆர்டெர்ன், நியூசிலாந்து நாட்டில் ஊரடங்கு நடவடிக்கைகளை முடித்த பிற்பாடு தகுதியான மக்களில் 90% பேர் முழுமையாக தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே தளர்வுகளை அனுபவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். இன்றைய நிலவரப்படி, அந்நாட்டில் 70% பேர் முழுமையாக தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும் நியூசிலாந்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பேரலையின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 2,492 எட்டியுள்ளது எனவும் இதுவரை 28 இறப்புகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.