இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

0
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் - சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் - சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது அதிகரிக்கும் பாதிப்புகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 20,551 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,41,07,588 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 70 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 526600 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 21,595 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நேரத்தில் சிகிச்சை பெறுவோர் விகிதமும் 0.31% ஆக குறைந்துள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 36,95,835 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2,05,59,47,243 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டும் தான் சிறந்த ஆயுதம் என்று மத்திய அரசு, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. அதனால் விரைந்து தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக புதிய கட்டுப்பாடுகள் – தேவஸ்தானம் அறிவிப்பு!

தற்போது 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தடுப்பூசி வரும் செப்டம்பர் மாதம் 28 ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்புகள் நேற்றை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!