கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – அனைத்து பள்ளிகளும் வரும் 24-ந் தேதி வரை மூடல்! முக்கிய உத்தரவு!
கொரோனா கேஸ்களில் திடீர் அதிகரிப்பு காரணமாக அனைத்து பள்ளிகளையும் மூடுவதாக மாநில அரசு கடந்த செவ்வாயன்று அறிவித்துள்ளது. அதாவது, செவ்வாய்க்கிழமை அரசால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், சமீப காலமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் அடுத்த வாரம் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24-ந் தேதி வரை பள்ளிகள் மூடல்:
இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டது. ஆனால் தடுப்பூசி நடவடிக்கைகள், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் முதல் அலை, இரண்டாம் அலையைப் போல் அல்லாமல், உயிரிழப்புகள் பெரிய அளவில் ஏற்படவில்லை. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கொரோனா நான்காவது அலை தற்போது தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சிறு உடல்நிலை பிரச்சினைகள் ஏற்பட்டாலும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மணிப்பூரில் கோடை விடுமுறை முடிந்து பல பள்ளிகள் ஜூலை 16-ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வருகிற 24 ந் தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றி மணிப்பூர் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் சூழலில், அனைத்து பள்ளிகளும் வருகிற 24ம் தேதி வரை தொடர்ந்து மூடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வீரியமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 16,935 பேர் பாதிப்பு!
மேலும் மணிப்பூரில் கடந்த திங்கட்கிழமை 47 பேருக்கும், செவ்வாய் கிழமை 59 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 57,264 ஆகவும் உள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தம் 2,120 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்