தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை – ஆய்வில் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது உருமாறிய கொரோனாவா என சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் தற்போது பரவி வரும் கொரோனா உருமாறவில்லை எனவும் பழைய தன்மை உடன் தான் பரவி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா முதல் அலை தாக்கம் பரவி வந்தது. அதன் பின்னர் பல கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தி உள்ளது.
TN Job “FB Group” Join Now
வெளிநாடுகளில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் பரிமாண வளர்ச்சி அடைந்த உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் தாக்கம் தமிழகத்திலும் பரவி வருவதாக கூறப்பட்டது. இது குறித்து கண்டறிய 20 மாதிரிகளை பெங்களூரில் உள்ள, ‘இன்ஸ்டன்’ என்ற நிறுவனத்திற்கு சுகாதாரத்துறை அனுப்பியது.
TN Police Constable PMT/PET தேர்வுகள் ஒத்திவைப்பு – டிஜிபி அறிவிப்பு!!
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வா விநாயகம் கூறுகையில், “உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் உள்ளது. தமிழகத்திலும் இந்த உருமாறிய வைரஸ் உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் அந்த வைரஸ் இல்லை என வந்துள்ளது. ஏற்கனவே உள்ள வைரஸ் மாதிரி தான் இந்த வைரஸ் உள்ளது. எனவே எந்த ஒரு வைரஸாக இருந்தாலும் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றினாலே அதனை கட்டுப்படுத்த முடியும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.