கொரோனா அச்சம்: முன்கூட்டியே முடியும் சட்டமன்ற கூட்டத் தொடர்!

0
முன்கூட்டியே முடியும் சட்டமன்ற கூட்டத் தொடர்
முன்கூட்டியே முடியும் சட்டமன்ற கூட்டத் தொடர்

கொரோனா அச்சம்: முன்கூட்டியே முடியும் சட்டமன்ற கூட்டத் தொடர்!

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கூட்டத் தொடரை ரத்து செய்யக் கோரி எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ அரசின் செயல்பாடுகளை மக்கள் அறிந்துகொள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெறவேண்டும் எனக் கூறியிருந்தார்.

சினிமாவிலும் கொரோனா மரண மாஸ் – திரையரங்குகளும் மூடல்

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சட்டப் பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

அதில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவினால் பல்வேறு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது சட்டமன்றமும் முடங்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கொரோன விழிப்புணர்வு, பாதுகாப்பு குறித்த தக்வல்களில் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!