திருச்சி, கோவை மாவட்டங்களில் தடுப்பூசி பணிகள் நிறுத்தம் – தட்டுப்பாடு எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதால் கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்:
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின், கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கு ஜூன் 16 வரை நீட்டிப்பு – கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
இந்த நிலையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகிறது. மத்திய அரசு அளித்த தடுப்பூசிகள் இருப்பு குறைந்துள்ளதால் கையிருப்பு குறைந்துள்ளது. திருச்சியில் தற்போது 900 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் அவை மத்திய சிறைக்கைதிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு போடப்படும் என்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே போல் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் இன்று முதல் தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என மாநகர ஆணையர் குமரவேல் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 80 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 15 ஆம் தேதிக்கு பின்னர் தான் மத்திய அரசு தடுப்பூசிகள் அனுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசிகள் வந்த பிறகு மீண்டும் முகாம்கள் நடத்தப்படும் என்று திருச்சி, கோவை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளனர்.