தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது – உச்ச நீதிமன்றம் கருத்து !
கொரோனா தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. இதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கைக்கு விடுத்துள்ளது.
உச்சநீதிமன்றம்:
கொரோனா இரண்டாம் பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்தியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எனவே பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த வருடத்தை விட தற்போதைய இரண்டாம் பரவல் அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உரிய நேரத்தில் சிகிக்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமலும், சுவாச கருவி பற்றாக்குறையாலும் அவதிபட்டு வருகின்றன. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகள் இருப்பு இல்லாத நிலையும் காணப்படுகிறது. எனவே அரசு தொற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் தடுப்பூசியின் விலையில் குழப்பங்கள் நிலவுகிறது. இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
டெலிகிராமில் க்ரூப் வீடியோ கால் செய்யலாம் – சிஇஒ அறிவிப்பு !
இந்த தடுப்பூசியின் விலையை தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பது ஏக முடியாது என டெல்லி உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் தடுப்பூசி விநியோகத்தின் கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் விலையை தீர்மானித்தால் விலை ஒரே மாதிரியாக இருக்காது என நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்