தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை – பொதுமக்கள் ஏமாற்றம்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி மையங்களில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
தடுப்பூசிகள் பற்றாக்குறை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு தொடர்ந்து தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்கை பிறப்பித்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி நோய் பரவலை தடுக்க முயற்சித்து வருகிறது. மற்றொரு புறம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இவை உடம்பில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 18 வயது முதல் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் உள் ஒதுக்கீடு – விரைவில் இறுதி அறிக்கை!
தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது. கடந்த வாரம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு 3 நாட்கள் இந்த பணி நிறுத்தப்பட்டு இருந்தது. பிறகு மத்திய அரசிடம் இருந்து 3.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தது. பிறகு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் 8 லட்சம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டது அவை 2 நாட்களில் தீர்ந்து விட்டன. நேற்று தடுப்பூசி இருப்பு குறைந்தது. அதனால் 66,679 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் இன்று முகாம்கள் மூடப்பட்டன. மேலும் சென்னையில் உள்ள 64 முகாம்களும் தடுப்பூசி இல்லாமல் இன்று செயல்படவில்லை. கோவை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட பல நகரங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதுவரை தமிழகத்தில் 1,57,41,118 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.