கோவாக்சின் ரூ.1410, கோவிஷீல்டு ரூ.789 – தனியார் மருத்துவமனைகளுக்கு விலை நிர்ணயம்!
தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் அம்மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி விலை
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்துடனும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விற்பனை செய்வதற்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு, தடுப்பு பணிகள் – ஆளுநரை சந்திக்கும் முதல்வர்!
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ‘தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணைக்கு ரூ.789 மற்றும் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் தவணைக்கு ரூ.1,410 மாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளுக்கு சேவை கட்டணங்களுடன் ரூ.1,145 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு சேவை கட்டணமாக ரூ.150 வசூலிக்க கொடுக்கப்பட்ட அனுமதி மறுக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு தடுப்பூசிக்கும் அறிவிக்கப்பட்டுள்ள விலை, அதன் உற்பத்தியாளர்கள் நிர்ணயித்துள்ள விலையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதால், தனியார் தடுப்பூசி மையங்கள் அதற்கு மேல் பணம் வசூலிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.