தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கு புதிய வழிமுறை – நாளை முதல் அமல்!!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்த மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது இதனை தடுக்க மதுரை மாவட்டத்தில் புதிய வழிமுறை ஒன்று நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.
தடுப்பூசி முன்பதிவு:
தமிழகத்தில் சுமார் 20 நாட்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கில் இருந்து தடுப்பூசி பணிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதியுடைய மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்குள்ளுமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் கொரோனாவில் இருந்து மீள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களாக தடுப்பூசி செலுத்த மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? பாஜக மாநில தலைவர் கருத்து!
தடுப்பூசி வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இவர்ந்து வருகிறது. அதன்படி மதுரை மாவட்டம் இளங்கோ மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சமூக இடைவெளி இன்றி மக்கள் குவிந்தனர். தற்போது இதனை தடுக்க அங்கு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி முன்பதிவு மேற்கொள்வதற்கு புதிய வழிவகை கையாளப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி மதுரை அரசு மருத்துவனை, தடுப்பூசி முன்பதிவு செய்வதை கட்டாயமாக்கியது. மேலும் தடுப்பூசி முன்பதிவை மேற்கொள்ள அதற்கான உதவி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்பதிவு செய்த பின்பு குறுஞ்செய்தி மூலம் தடுப்பூசி வழங்கும் தேதி மற்றும் நேரம் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மட்டும் அல்ல.கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் காலை 6 மணி முதல் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.ஆகவே கோவையிலும் மதுரையை போல தடுப்பூசி முன்பதிவு முறையை அமுல்படுத்த வேண்டும்.