தமிழக சிறைகளில் 30 சதவீத கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி – அதிகாரிகள் தகவல்!
தமிழக சிறைச்சாலைகளில் தண்டனை பெற்று வரும் 30% கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கு தடுப்பூசி:
கொரோனா நோய் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகத்தின் சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக சிறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தியுள்ளனர். சிறை ஊழியர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து குற்றவாளிகள் மற்றும் கைதிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக சிறைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 30% கைதிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மே மாத இறுதியில் செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரி சுனில் குமார் சிங், பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், ஆகஸ்ட் 2020 முதல் புதிய கைதிகள் அனைவரும் மத்திய சிறைக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.
தமிழக கோவில் அர்ச்சகர்களுக்கு ரூ.4000 நிதியுதவி – முதல்வர் நாளை வழங்கல்!
மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் குற்றவாளி வார்டு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோவிட் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 198 சிறை ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றினால் 12 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இவர்களில் 10 பேர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பலியானதாக சுனில் குமார் சிங் தெரிவித்தார்.