தமிழகத்தில் பேருந்து பொது போக்குவரத்துக்கு கொரோனா தடுப்பூசி அவசியம் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பெருந்தோற்று அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசி கட்டாயம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது 2 ஆண்டுகளை கடந்து கொரோனா பெருந்தொற்று பரவிய நிலையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி ஊரடங்கு அமல், புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு – அரசு அறிவிப்பு!
அந்த வகையில் தமிழகத்திலும் தினசரி நாட்களில் இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலேயே இருந்து வருவதால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் கொரோனா தொற்று அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டாலும், லேசான அறிகுறியுடன் மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உயிரிழப்புகள் கொரோனா 2வது அலையைவிட மிகவும் குறைவாகவே இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 23 & 30 ஆகிய தேதிகளில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
அதனால் அனைவரும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பொது போக்குவரத்துக்கள் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.