மாநில அரசுகளுக்கு 55.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் – மத்திய அரசு விநியோகம்!
கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது தொடர்ந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 55.73 கோடி கோவிட் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி:
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நோய் பரவும் விகிதம் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்த மக்கள் தயங்கிய நிலையில் அரசு பிரமுகர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் தடுப்பூசி போடுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
Axis Bank வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் மாற்றம்!
அதனை தொடர்ந்து பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்தி வந்தனர். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதாவது ,நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு இதுவரை, 55.73 கோடிக்கும் அதிகமான (55,73,55,480) கோவிட் தடுப்பூசி போஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது என்றும்,கூடுதலாக 1,00,37,990 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கிறது எனவும் கூறினார்.
TN Job “FB Group” Join Now
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 53,26,03,653 டோஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது சுமார் 2.85 கோடி (2,85,43,781) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அலை மீண்டும் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் நோய் தொற்றினை முழுமையாக அளித்திடலாம் என கூறப்படுகிறது.