தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – இன்று முதல் கொரோனா தடுப்பூசி!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு பெரும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
காபூல் குண்டுவெடிப்பு: ‘தேடிவந்து வேட்டையாடி பலி தீர்ப்போம்’ – அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!
இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் படி கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் சுழற்சி முறையில் திறக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் அனைத்து ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், பள்ளியில் பணி செய்யும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். இதுவரை தமிழகம் முழுவதும் 80% ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பாதுகாப்பிற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.