தமிழகத்தில் செப் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதன் அடிப்படையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் உதவித்தொகை ரூ.500 உயர்வு – கவர்னர் ஒப்புதல்!
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்க இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் சுத்தம் செய்யப்படுவதை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து நேற்று சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு பணிகளின் வேகத்தை பொறுத்தவரை பார்க்கையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.