5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – பணிகள் தொடக்கம்!
கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் தீவிரமெடுத்துள்ள நிலையில் இஸ்ரேலில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா தீவிர பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலகம் முழுவதும் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் வண்ணமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை பரவலை தொடர்ந்து 3ம் அலை பரவும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டது. அங்கு கோடை காலம் தொடங்கிய நிலையில் கொரோனா தாக்கம் மீண்டும் பரவ தொடங்கியது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இஸ்ரேலில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக ஃபைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இஸ்ரேல் பிரதமர் தனது இளைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தினார். அதனை தொடர்ந்து இந்தியாவிலும், குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 2022 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.