1 முதல் 5 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மருத்துவர்கள் அறிவிப்பு!
அமெரிக்காவின் ஒரு பகுதியான வாஷிங்டனில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதாகவும், அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
சீனாவை தொடர்ந்து அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி இரண்டு தவணையாக போடப்படுகின்றன. இந்த கொரோனா தடுப்பூசி முதலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் ஒரு குறிப்பிட்ட வயது உள்ளவர்களுக்கு போடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த கொரோனா ஊசி போடுவதற்கு பல தரப்பில் இருந்து சர்ச்சைகள் எழுந்தன. COVID 19 தடுப்பூசி போடுவதற்கு ஏராளமானோர் அச்சத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் தடுப்பூசியின் உண்மை தன்மை பற்றி கூறிய பின்னரே கொரோனா ஊசி போடுவதற்கு மக்கள் முன் வந்தனர். அதன்படி, 1 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போவதற்கான அறிவிப்பு வெளியானது.
TCS நிறுவனத்தில் BA, B.Sc படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரம் இதோ!
இந்தியா உட்பட பல நாடுகளிலும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் வாஷிங்டனில் ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போவதற்கான அறிவிப்பை, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.