12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி!
இந்தியாவில் 12 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கோர்பெவேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சியாக கோவாக்சின், கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் 40 வயதினருக்கு மட்டும் செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி பிறகு 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
ஹிஜாப் பிரச்சனை எழுந்த நகராட்சியில் 10 வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக – திமுக வேட்பாளர் வெற்றி!
மேலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி பெறும் நடவடிக்கைகளை பாரத் பயோ டேக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசியை 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கும் செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த மாதம் முதல் கோவாக்சின் தடுப்பூசி 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் மூலமாகவும், மருத்துவமனைகள் மூலமாகவும் செலுத்தப்பட்டு வருகிறது.
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! மே 21ல் தேர்வு!
அதனை தொடர்ந்து தற்போது12 வயதிற்குட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோர்பெவேக்ஸ் தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு 2 டோஸ் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.