12 முதல் 17 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – புதிய திட்டம்!
ஆப்ரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% இலக்காக கொண்டுள்ளது. இதனால் 12-17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பைஸர் தடுப்பூசி:
உலக நாடுகள் அனைத்தையும் கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வந்தது கோவிட்-19 என்னும் பெருந்தொற்று ஆகும். இதனால் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாடுகள் பொருளாதார நிதி நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி எதிர்பாராத விதமாக இத்தகைய பெருந்தொற்றால் அதிக அளவிலான உயிரிழப்புகள் நிகழ்ந்தது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. வெகு நாட்களாக இத்தகைய பெருந்தொற்றுக்கான மருந்துகள் கண்டுபிடிக்காமல் இருந்தது. ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான மருந்து வகைகளை வாங்கி செலுத்தி வந்தனர். மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது உலக சுகாதாரத் துறைக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
TN MRB 119 காலிப்பணியிடங்கள் – அக்.28 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
முதலில் மருத்துவர்கள், அரசுப்பணியாளர் என அனைவருக்கும் செலுத்திவிட்டு பின்னர் பொது மக்களுக்கு செலுத்தினர். தடுப்பு மருந்துகளும் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் தென் ஆப்பிரிக்காவில் அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸை தொடர்ந்து உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அவ்வாறு பரவிய உருமாறிய கொரோனா வைரஸை அஸ்ட்ராஜெனகா சரிசெய்யாத காரணத்தால் அதனை பயன்படுத்துவதை அரசு நிறுத்தியது. உடனே அந்த மருந்துக்கு பதிலாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்தப்படும் என்று தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை அறிவித்தது.
தமிழக தபால் துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்து பயன்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வரும் டிசம்பர் மாதத்திற்குள் 70% தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதனால் அந்த இலக்கை எட்டும் வகையில் தென் ஆப்பிரிக்காவில் 12 – 17 வயதினருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அடுத்த வாரம் முதல் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே 12 – 17 வயதினருக்குச் செலுத்தப்படும். மேலும் 12 – 17 வயதினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தற்போது 2வது டோஸ் செலுத்தப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.