இந்தியாவில் 75% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்!
இந்தியாவில் அடுத்த 30 நாட்களில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை 75% மக்களுக்கு செலுத்தி விட்டால் கொரோனா உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துவிடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்ட பணியாக அனைத்து மாநிலங்களும் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற அரசு மக்களுக்கு அறிவுறுத்துகிறது. அதிகரிக்கும் உயிரிழப்புகள் மக்கள் மத்தியில் ஆழ்ந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டினார்.
பழங்கால வாகனங்கள் பதிவு – மத்திய சாலை போக்குவரத்து துறை புதிய நடவடிக்கை!
அதன் விளைவால் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. அதன் பின், கடந்த மே மாதம் முதல் 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் மத்திய மாநில அரசுகளால் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் உடலில் ஆன்டிபாடிகளை அதிகரித்து தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்புகளும் குறைந்து வருகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்தாலும் உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 30 நாட்களில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை 75% மக்களுக்கு செலுத்திவிட்டால் கொரோனா உயிரிழப்புகள் வெகுவாக குறைந்து விடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.