செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில் தடுப்பூசி – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசிகள் போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்து உள்ளார்.
கல்லூரியில் தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் கொரோனாவின் உருமாறிய “டெல்டா மற்றும் டெல்டா பிளஸ்” வைரஸின் இரண்டாம் அலை பரவலால் மாநிலம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து வைரஸ் பரவல் என்பது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.
கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – உள்துறை செயலாளர் கடிதம்!
இதனை அடுத்து சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட கூடுதல் தளர்வுகளில், வைரஸ் தாக்கம் ஒரளவு குறைந்துள்ளதால் கடந்த பல மாதங்களாக திறக்காமல் உள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டும் நடைபெற்றுள்ளது. மற்ற மாணவர்களுக்கு அதாவது, இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில், கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்பட்டு வகுப்புகளை நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாதோர் கட்டாய விடுப்பில் கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்பப்படுவர் என்று அரசு சார்பில் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் உள்ள 112 கல்லூரிகளிலும், கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் துவக்கப்பட உள்ளதாக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.