தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மருத்துவ ஆய்வு கழகம்!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மருத்துவ ஆய்வு கழகம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மருத்துவ ஆய்வு கழகம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மருத்துவ ஆய்வு கழகம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழிகாட்டுதல் வழங்கிய பின்னர் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்துவதே ஒரே வழியாக இருந்தது. ஊரடங்கு காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கொரோனா பரவலை முழுமையாக தவிர்க்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே வழியாக உள்ளது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை – ஆகஸ்ட் 15 ல் அறிவிப்பு?

அதன் பின்னர் மே 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 47,85,44,114 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த 1 ஆண்டாக திறக்கப்படாமல் உள்ளது. மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதால் பள்ளிகள் திறப்பதில் அரசு எச்சரிக்கையுடன் உள்ளது.

இந்நிலையில் 18 வயதிற்கு குறைவான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்கக்கோரி நேர்வழி இயக்கம் என்ற அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசு தரப்பில் முன்னுரிமை அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதுமட்டுமில்லாமல் இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, தமிழக பள்ளிகளில் உயர்நிலை வகுப்பு படிக்கும் 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு இதுவரை இந்திய மருத்துவ ஆய்வு கழகம் எந்த வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!