நாடு முழுவதும் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – 6 மாநிலங்களில் தொடக்கம்!
நாடு முழுவதும் மே 1ம் தேதியான இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், திட்டமிட்டபடி 6 மாநிலங்களில் மட்டுமே பணிகள் தொடங்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி வருகிறது. தடுப்பூசி போடுவது தான் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவித்து உள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. முதல் முன்னுரிமை அடிப்படையில் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வரிசையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
KVS 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2021 – நுழைவுத்தேர்வு ரத்து!
இந்நிலையில் கடந்த வாரம் பிரதமர் மோடி அவர்கள் மே 1ம் தேதி முதல் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்தார். இதனால் கடந்த ஏப்ரல் 28ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இணையத்தில் பதிவு தொடங்கியது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லாததால் இன்று தடுப்பூசி திட்டம் தொடங்கப்படவில்லை. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. கையிருப்பு இருக்கும் தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 2வது டோஸ் போடுவதற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் இன்று தொடங்கப்படாது என்று நேற்றே தெரிவிக்கப்பட்டது.