தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையினை கருத்தில் கொண்டு அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பது கொரோனா 3வது அலையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனால் மக்களிடையே ஓர் அச்சம் நிலவுகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் 26,50,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 25,97,943 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 17,027 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
OLA Electric Scooter தயாரிப்பு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!
இதே நிலை தொடர்ந்தால் கொரோனா 3வது அலை தொடரும். ஆகவே கொரோனா 3வது அலை வராமல் தடுக்கும் விதமாக தமிழக அரசால் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிறுதோறும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மெகா முகாம்கள் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பாஸ்போர்ட்டில் இணைப்பது எப்படி?
முதல் வாரத்தில் 21 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு தடுப்பூசி முகாம் தொடங்கியது . இத்தகைய முகாமில் வேலூர் மற்றும் இன்னும் சில பகுதிகளில் மக்களை கவரும் விதமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இம்முகாம்களில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதனால் இலக்கை தாண்டி 23 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.