தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – செப்.19 ஆம் தேதிக்கு மாற்றம்!

0
தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - செப்.19 ஆம் தேதிக்கு மாற்றம்!
தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - செப்.19 ஆம் தேதிக்கு மாற்றம்!
தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – செப்.19 ஆம் தேதிக்கு மாற்றம்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி முகாம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. பலர் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக குறைந்து வருகிறது. மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் ஊரடங்கு தளர்வு, புதிய வழிகாட்டுதல்கள் – சுகாதாரத்துறை அமைச்சர்!

அதனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அதை விட மொத்தம் 8.36 லட்சம் பேருக்கு அன்றைய தினத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு!

இந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் வருகிற செப்.17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், சென்னையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இந்நிலையில் வருகிற 17 ஆம் தேதி தடுப்பூசி முகாம் தொடங்கப்பட இருந்த நிலையில் தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதால் செப்.19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!